இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரியங்கா (வயது 22). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் பிரியங்கா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பிரியங்காவை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story