கம்மாபுரம் அருகே மாணவி தீக்குளித்து தற்கொலை


கம்மாபுரம் அருகே மாணவி தீக்குளித்து தற்கொலை
x

கம்மாபுரம் அருகே மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கம்மாபுரம்,

கம்மாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகள் ரமா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி ரமா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story