ஞான மாரியம்மன் கோவில் திருவிழா


ஞான மாரியம்மன்  கோவில்  திருவிழா
x
தினத்தந்தி 1 Jun 2022 7:30 PM GMT (Updated: 1 Jun 2022 7:30 PM GMT)

சீரியம்பட்டி கிராமத்தில் ஞான மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞானமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சீரண்டபுரம் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடி வருகின்றனர். விழாவையொட்டி ஏரிக்கோடி முனியப்பன் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அம்மனுக்கு கூழ் ஊற்றுதல்,, மாவிளக்கு எடுத்தல், தட்டுவரிசை எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், பால்குடம் எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும், பொங்கல் வைத்தும் ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.



Next Story