மர்மமான முறையில் ஆடுகள் சாவு

விருதுநகரில் மர்மமான முறையில் ஆடுகள் இறந்தன.
விருதுநகர் கருப்பசாமி நகரில் வசிப்பவர் ராஜா (வயது49). இவரது வீட்டு முன்பு இவர் வளர்த்த 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதேபோன்று இவரது வீட்டு அருகில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பவரது வீட்டின் முன்பு அவரது 10 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் இவரது தங்கை வீட்டின் முன்பும் 5 ஆடுகள் இறந்து கிடந்தன. இவ்வாறு ஆடுகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து கிடப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ராஜா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





