100 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள்


100 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள்
x

நாகை அருகே சிக்கலில் 100 பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை அருகே சிக்கலில் 100 பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி

நாகை அருகே உள்ள சிக்கல் ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாகை ஒன்றியத்தில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, நாகை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பெண் பயனாளி ஒருவருக்கு 5 வெள்ளாடுகள் வீதம், 100 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 500 வெள்ளாடுகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் நாகை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் சஞ்சீவி ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம், துணை இயக்குனர் சுப்பையன், கால்நடை டாக்டர்கள் லாரன்ஸ், சசிகலா ஹரிகிருஷ்ணன், முனிவெங்கட் பூபதி, நந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர்கள், உதவியாளர்கள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story