கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 19 Jun 2023 8:37 PM GMT (Updated: 20 Jun 2023 3:11 AM GMT)

கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்

ஈரோடு

கோபி அருகே உள்ள மொடச்சூர் பெரியார் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பசுபதி (வயது 25) வேன் டிரைவர். இவருக்கும் சிறுவலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மூர்த்தி என்பவருைடய மகள் முருகவேணி (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நேற்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கொளப்பலூர் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி இருதரப்பு பெற்ேறாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பசுபதியின் பெற்றோருடன் காதல் ேஜாடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story