கணவன், மனைவியை தாக்கி 9½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு


கணவன், மனைவியை தாக்கி 9½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

சேந்தமங்கலம் அருகே கணவன், மனைவியை தாக்கி 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

மளிகைக்கடைக்காரர்

சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (39). இவர்களுக்கு சுஜித் பிரவீன் (8) என்கிற மகன் உள்ளான். இந்தநிலையில் சரவணன் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் வழக்கமாக கடையை மூடிவிட்டு மகன் சுஜித் பிரவீன் உடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

அவருக்கு முன்பாக அவரது மனைவி சவுந்தர்யா ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென்று அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க 3 பேர் அவர்களை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கணவன், மனைவியை தாக்கினர். அப்போது சவுந்தர்யா கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

மர்ம நபர்கள்

இது குறித்து சரவணன் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து தப்பி ஓடிய 3 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story