வீட்டில் தூங்கிய வெள்ளி வியாபாரி மனைவியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கிய வெள்ளி வியாபாரி மனைவியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x

வீட்டில் தூங்கிய வெள்ளி வியாபாரி மனைவியிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சி:

மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). இவர் அப்பகுதியில் உள்ள மலையாண்டி தெருவில் வெள்ளிக்கடை வைத்துள்ளார். இவரும், இவரது தாய் ஜெகதாம்பாள்(70), மனைவி ஜான்சிராணி(36) மற்றும் குழந்தைகள் பிரியதர்ஷினி, குமரேஷ் ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை எழுந்த ஜெகதாம்பாள் வீட்டின் கதவை திறந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த ஜான்சிராணியின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு விழித்த ஜான்சிராணி கையால் சங்கிலியை பிடித்துக்கொண்ட நிலையில், சங்கிலியின் ஒரு பகுதி அறுந்து மர்ம நபர் கையில் சிக்கியதாகவும், இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மொத்தம் 8½ பவுன் தங்கச்சங்கிலியில் சுமார் 3 பவுன் பறிபோனதாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story