வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்கசங்கிலி பறித்தவர் கைது


வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்கசங்கிலி பறித்தவர் கைது
x

பாளையங்கோட்டை அருகே, வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்கசங்கிலியை பறித்து சென்ற மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை அருகே, வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்கசங்கிலியை பறித்து சென்ற மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நண்பர்கள்

பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 34). இவரும் கீழநத்தம் கீழுரை சேர்ந்த ஆறுமுகமும் நண்பர்கள்.இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சுப்பிரமணியை, ஆறுமுகம் கீழநத்தம் புதுக்குளம் அருகே வருமாறு கூறியுள்ளார். உடனே அவர் அங்கு வந்தார். அப்போது ஆறுமுகம், சுப்பிரமணியிடம் பணம் கேட்டுள்ளார். சுப்பிரமணி ரூ.4 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த ஆறுமுகத்தின் நண்பர்களான சிவா (19) மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரும் சுப்பிரமணியை அரிவாளை காட்டி மிரட்டி தங்கசங்கிலி மற்றும் செல்போனை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

கைது

இது குறித்து சுப்பிரமணி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரிவாளை காட்டி மிரட்டி தங்கசங்கிலி மற்றும் செல்போனை பறித்து மிரட்டல் விடுத்த சிவாவை நேற்று கைது செய்தார்.


Next Story