பெண்ணிடம் தங்க நகை பறிப்பு


பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
x
தினத்தந்தி 15 July 2023 1:55 AM IST (Updated: 15 July 2023 5:17 PM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணிடம் தங்க நகையை மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி விஜயகுமாரி (வயது 40).இவர் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை கோவிலடி கிராமத்தின் அருகில் உள்ள காவிரி ஆற்றின் திட்டு பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர், விஜயகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்க நகையை அறுத்து கொண்டு அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்..இது குறித்து விஜயகுமாரி தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஐயாபிள்ளை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story