2 வீடுகளின் கதவை உடைத்து நகைகள் திருட்டு


2 வீடுகளின் கதவை உடைத்து நகைகள் திருட்டு
x

திருவாரூர் அருகே புதுப்பத்தூர் பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர்

திருவாரூர்,

திருவாரூர் அருகே புதுப்பத்தூர் பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை திருட்டு

திருவாரூரை அடுத்த புதுப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமாணிக்கம். இவருடைய மகன் முத்துகுமரன்(வயது39). இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். முத்துகுமரன் வெளியூரில் தங்கி வேலைபார்த்து வருவதால் நீண்ட நாட்களாக அவருடைய வீடு பூட்டி கிடந்தது. சம்பவத்தன்று அவருடைய வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் முத்துக்குமரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து திருவாரூருக்கு முத்துக்குமரன் வந்து வீட்டுக்கு சென்று பார்த்தார்.அப்போது வீட்டில் பீரோ கதவு உடைக்கப்பட்டு 2 பவுன் நகைகளை மா்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதைப்போல அவரது வீட்டுக்கு எதிாில் வசிக்கும் மீரா(53) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த 2 பவுன் நகைகளை திருடி சென்றனர். மேலும் அதற்கு அடுத்த வீடான சந்தியா என்பவரின் வீட்டின் கதவையும் மர்மநபர்கள் உடைத்துள்ளனர். ஆனால் சந்தியா வீட்டில் இருந்து நகைகள் திருட்டு போகவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story