தங்க மாரியம்மன் கோவில் திருவிழா
அதிராம்பட்டினம் தங்கமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
தஞ்சாவூர்
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட சால்ட் லைன் தெருவில் உள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மனப்பாங்குளம் பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்க்ள பால்குடம், முளைப்பாரி, பூதட்டு எடுத்து கொண்டு முக்கிய விதி வழியாக ஊர்வலமாக சென்று தங்க மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தங்க மாரியம்மன் வீதி உலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story