அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சிவசக்தி தலைமை தாங்கினார். மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





