வாடிப்பட்டி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
வாடிப்பட்டி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
மதுரை
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் புது கண்மாய் சாலையில் வெங்காய நாயக்கர் ஊருணி அருகில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், வேளாண்மை அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் வரவேற்றார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி ஜெகதீசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story