பஸ் வசதி ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்


பஸ் வசதி ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்
x

பஸ் வசதி ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் நூத்தப்பூர், சிறுநிலா கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளில், மாணவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் 39-வது நம்பர் அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் அந்த பஸ் வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி முடிந்து சிரமத்துடன் வீட்டிற்கு நடந்து செல்கிறோம். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story