கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள்


கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள்
x

கோரிக்கை அட்டை அணிந்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் பணிபுரிந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தினர், அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமையில் நேற்று முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். அந்த கோரிக்கை அட்டையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட வேண்டும். அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைந்து, புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓட்டுனர்களுக்கு கல்வி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. வருகிற 15-ந்தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், 22-ந்தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவும் முடிவு செய்துள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story