மாநில அரசின் சட்டத்திற்கு கவர்னர் உடனே அனுமதியளிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


மாநில அரசின் சட்டத்திற்கு கவர்னர் உடனே அனுமதியளிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Aug 2022 6:57 AM GMT (Updated: 21 Aug 2022 6:58 AM GMT)

மாநில அரசின் சட்டத்திற்கு கவர்னர் உடனே அனுமதியளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து கவர்னர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இது.

உயர்கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவதும், மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்.

இந்த பின்னணியில்தான் மாநில அரசுக்கு புதிய சட்டம் நிறைவேற்றிடும் தேவை எழுந்தது. எனவே, கவர்னர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை குறுக்கு வழியில் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் தொடர் கொட்டத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story