கோவில்பட்டியில் அரசு ஆஸ்பத்திரி தொழிலாளியிடம்செல்போன் பறித்த 2பேர் கைது


தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில் அரசு ஆஸ்பத்திரி தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி அருந்ததியர் தெரு கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (வயது47). கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அண்ணா பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மாரியப்பனை பணம் கேட்டு மிரட்டினர். பணம் தரமறுத்த அவரை தாக்கி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் வழக்குப் பதிவு செய்து, தொழிலாளியிடம் செல்போன் பறித்த இலுப்பையூரணி மறவர் காலனி வெள்ளப்பாண்டி மகன் உத்தண்டராமன் (33), குருமலை சுந்தரேஸ்வரபுரம் முத்துப்பாண்டி மகன் மாரிசெல்வம் ( 22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ராசுக்குட்டியை தேடி வருகின்றனர்.


Next Story