ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. டாக்டர் பொ.பிரபாகர், ரத்த வங்கி அலுவலர் டாக்டர் குமரவேல் ஆகியோர் வரவேற்றனர். இதில் திருப்பத்தூர் ஈஸ்வரி கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் 20 பேர் ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம் செய்த மாணவர்களை கல்லூரியின் நிறுவனர் என்ஜினீயர் ஜி.பொன்னுசாமி, முதல்வர் டாக்டர் தீன்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





