அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பெண் சாவு


அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பெண் சாவு
x

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பெண் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ராதா (வயது 32). முதுகலை பட்டதாரியான இவர், கடந்த 2019-ம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குளித்தலை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அவர் அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மறுநாள் காலை அவரது பெற்றோர் பார்த்தபோது ராதா எழுந்திருக்க முடியாமல் இருந்துள்ளார்.

இதைப்பார்த்த அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story