கராத்தே மாஸ்டரை கரம் பிடித்த பட்டதாரி பெண்


கராத்தே மாஸ்டரை கரம் பிடித்த பட்டதாரி பெண்
x

பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து, கராத்தே மாஸ்டரை பட்டதாரி பெண் திருமணம் செய்து கொண்டார்.

திண்டுக்கல்

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரி. அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (24). கராத்தே மாஸ்டர். இவர்கள் 2 பேரும், வடமதுரை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக காதலித்தனர்.

இந்தநிலையில் ஜெயலட்சுமிக்கு, அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அய்யலூர் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு, வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஹரிஹரனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால், மணமக்களை அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story