உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் 22-ந் தேதி கிராம சபை கூட்டம்


உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் 22-ந் தேதி கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உலக தண்ணீர் தினத்ைதயொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 22-ந் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

உலக தண்ணீர் தினத்ைதயொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 22-ந் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினமான 22-ந் தேதி காலை 11 மணியளவில், கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அன்றையதினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், அவ்வூராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

விவாதம்

மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விவரம், கிராம வளா்ச்சி திட்டம் தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப்பொருட்கள் இக்கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story