அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்


அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
x

அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் சுதந்திர தினத்தன்று நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இயக்குனரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்ட பொருட்கள் விவாதிக்கப்படும். கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளார்.


Next Story