தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்


தீப்பிடித்து மூதாட்டி படுகாயம்
x

திண்டுக்கல் அருகே புதுமனை புகுவிழாவில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்த மதுரைவீரன் மனைவி பொன்னம்மாள் (வயது 70). இவரது பேத்தி தமிழ்ச்செல்வி ஜம்புளியம்பட்டியில் புது மனை புகுவிழா நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொன்னம்மாள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கில் இருந்த தீ அவரது சேலையில் பற்றி உடலில் பரவியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு, தமிழ்ச்செல்வியின் கணவர் ஜெயராமன் (40) ஓடி வந்து தீயை அணைத்து, படுகாயமடைந்த பொன்னம்மாளை மீட்டார். அதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story