வாகனம் மோதி மூதாட்டி சாவு


வாகனம் மோதி மூதாட்டி சாவு
x

வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே கோமங்கலம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சம்பவத்தன்று 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் இறந்த மூதாட்டி யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?, விபத்துக்கு காரணமான வாகன ஓட்டி யார்? என்பது பற்றி விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story