பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்


பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 87 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி

குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 87 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனத்தில் அனைத்தும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மனுக்கள் மீது உடனடித் தீர்வு

போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 87 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சர்மிளா பானு, பாலகிருஷ்ணன், போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயா, இளமதி உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story