பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்


பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:30 PM GMT (Updated: 25 Oct 2023 7:30 PM GMT)

தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 92 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 92 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 106 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மனுக்கள் மீது உடனடி தீர்வு

இந்த முகாமில் பெறப்பட்ட 92 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 14 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ஷர்மிளாபானு, ரங்கசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதையன், செல்வம், விஜயா, மணிவண்ணன் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story