தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்


தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 24-ந் ேததி நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 24-ந் ேததி நடைபெற உள்ளது.

குறை தீர்க்கும் முகாம்

ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 24-ந் தேதி காலை 11 மணியளவில் ராமநாதபுரம் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. புகார் மனுவில் தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இதே போல சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழுவிவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

23-ந் தேதிக்குள்

குறைதீர்க்கும் முகாமிற்கு ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலால் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. மேலும் தனியார் கூரியரில் அனுப்பப்படும் தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. புகார் மனு அடங்கிய தபால் உறையின் மீது தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் மார்ச் 2023 என்று தெளிவாக குறிப்பிட்டு வருகிற 23-ந்தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம்-623501 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

1 More update

Next Story