போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல்துறை சார்பில் குறை தீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட அவர் சம்மந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதேபோல் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தீர்க்கப்படாமல் இருந்த 20 பேரையும் அழைத்து அவர்களின் வழக்கு விவரங்களை கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், சரவணன், பாஸ்கரபாண்டியன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story