கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்


கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2023 9:22 AM GMT (Updated: 17 Jun 2023 10:46 AM GMT)

கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம் என திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.


Next Story