உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர் கூட்டம்; 4 கிராமங்களில் இன்று நடக்கிறது


உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர் கூட்டம்; 4 கிராமங்களில் இன்று நடக்கிறது
x

உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர் கூட்டம் 4 கிராமங்களில் இன்று நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 4 கிராமங்களில் நடைபெற உள்ளது. அந்த கிராமங்களின் விவரம் வருமாறு:-

அரியலூர் வட்டாரத்திற்கு கீழையூரிலும், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு வங்குடியிலும், செந்துறை வட்டாரத்திற்கு நக்கம்பாடியிலும், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு குவாகத்திலும் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். இக்கூட்டத்தில் கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். கூட்டத்தினை மேற்பார்வை செய்திட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால், அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story