வீட்டின் முன்பு தூங்கிய மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை


வீட்டின் முன்பு தூங்கிய மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை
x

ஏர்வாடி அருகே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த நபரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் ஜவர்கலால் நேரு (வயது 60). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவில் வியாபாரம் முடித்து கடையை பூட்டி விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் நேரு ரத்த வெள்ளத்தில் இருந்ததை பார்த்த அவரது உறவினர்கள் இது குறித்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நேருவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேரு சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story