ரூ.30 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா


ரூ.30 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ரூ.30 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழநீலிதநல்லூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். கீழநீலிதநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கோதை அம்மாள் பாபு முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் மரியலூயிஸ்பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முக பாண்டியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜானகி, கிளை செயலாளர்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், மைனர்சாமி, பரஞ்சோதி, தங்கத்துரை, இளைஞர் அணி சிவா, மாதவன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



1 More update

Next Story