குரூப்-4 தேர்வை 3,977 பேர் எழுதினர்


குரூப்-4 தேர்வை 3,977 பேர் எழுதினர்
x

தர்மபுரி மாவட்டத்தில் 22 மையங்களில் 2-வது நாளாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வை 3,977 பேர் எழுதினர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 22 மையங்களில் 2-வது நாளாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வை 3,977 பேர் எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-4 எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்று இந்த தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேளைகளிலும் நடைபெற்றது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்திலும் 2 நாட்கள் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

மாவட்டம் முழுவதும் 22 மையங்களில் இந்த எழுத்து தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் பஸ்கள் நின்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தை கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார். தேர்வு மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா? என்று மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் பெருமாள் உடன் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற எழுத்து தேர்வை எழுத 3,460 பேர் விண்ணப்பித்து இருந்தனர். காலை 2,026 பேர் இந்த தேர்வை எழுதினர். ௧.434 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோன்று மாலையில் நடைபெற்ற தேர்வை 1,951 பேர் எழுதினர். 1,509 பேர் தேர்வு எழுத வரவில்லை. இருவேளைகளிலும் நடைபெற்ற தேர்வை மொத்தம் 3,977 பேர் எழுதினர்.

1 More update

Next Story