ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு 'குவா, குவா'


ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு குவா, குவா
x

மேல்பாடி அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ராணிப்பேட்டை

காட்பாடி தாலுகா பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி (வயது 33). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து ராசாத்தியை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல்பாடி அருகே சென்றபோது பிரசவவலி அதிகரித்தது. அதனால் டிரைவர் ராஜேஷ்குமார் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார்.

அதைத்தொடர்ந்து ராசாத்திக்கு, மருத்துவ உதவியாளர் செண்பகம் பிரசவம் பார்த்தார். அதில் ராசாத்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் மேல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story