ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு 'குவா, குவா'


ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு குவா, குவா
x

வேலூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வேலூர்

வேலூரை அடுத்த பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் ரூபினி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ரூபினி பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து பிரசவ வலியில் துடித்த ரூபினியை ஆம்புலன்சில் ஏற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையை நோக்கி சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும்வழியில் அவருக்கு பிரசவவலி அதிகரித்தது.

அதனால் ஆம்புலன்சை நிறுத்தி ரூபினிக்கு மருத்துவ உதவியாளர் தினேஷ்குமார் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். ரூபினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story