மொபட் மீது சரக்கு வாகனம் மோதி காவலாளி பலி


மொபட் மீது சரக்கு வாகனம் மோதி காவலாளி பலி
x
தினத்தந்தி 1 July 2023 8:15 PM GMT (Updated: 1 July 2023 8:16 PM GMT)

மொபட் மீது சரக்கு வாகனம் மோதி காவலாளி பலி

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன் புதூர்-நெகமம் சாலையை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 72). இவர் கிணத்துக்கடவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கருப்பசாமி சம்பவத்தன்று இரவு தனது மொபட்டில் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் திடீரென மோதியது. இதில் கீழே விழுந்த கருப்பசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கருப்பசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கருப்பசாமிக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும்பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story