ரெயில் மோதி காவலாளி பலி


ரெயில் மோதி காவலாளி பலி
x

ஜோலார்பேட்டை அருகே ரெயில் மோதி காவலாளி பலியானார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னகூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). வாணியம்பாடி தனியார் மேல்நிலைப்பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு இரண்டு கைகள் மற்றும் கால்கள் துண்டாகி இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story