திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு குரு பூஜை–-பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்


திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு குரு பூஜை–-பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்
x

திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு குரு பூஜை நடைபெற்றது.பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோவிலில் 93-வது குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி மாயாண்டி சுவாமியின் ஜீவசமாதிக்கும் கோவிலின் கருவறையில் உள்ள விநாயக பெருமானுக்கும் சகல பூஜையும், சர்வ அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. விழாவையொட்டி கட்டிக்குளத்தில் இருந்து திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலைக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து மாயாண்டி சுவாமி, மாயாண்டி சுவாமி ஜீவசமாதியில் உள்ள விநாயகரை வழிபட்டனர். குருபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் அறங்காவலர் தட்சணாமூர்த்தி செய்து இருந்தார்.


Next Story