சாலையில் கிடந்த தங்க சங்கிலி போலீசில் ஒப்படைப்பு


சாலையில் கிடந்த தங்க சங்கிலி போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 5 July 2022 7:00 PM GMT (Updated: 5 July 2022 7:01 PM GMT)

சாலையில் கிடந்த தங்க சங்கிலி போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல்

பள்ளிபாளையம்:-

பள்ளிபாளையம்- சங்ககிரி சாலையில் அரசு வங்கி அருகில் மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த பாலாஜி (வயது 39), லோகேஷ்வரன் (27), மணி (55) ஆகிய 3 பேரும் அந்த மணிபர்சை திறந்து பார்த்தனர். அதில் 8 பவுன் தங்க நகைகள் இருந்ததை கண்டனர். உடனே அதனை பள்ளி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வசம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், அந்த நபர்களின் நேர்மையை பாராட்டினார். மேலும் தங்க நகைகளுக்கான உரிமையாளர்கள் அதன் ஆவணங்களை காட்டி நகைளை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story