தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
நெகமம்
நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ராஜேந்திரன்(வயது 34). டிரைவர். திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ராஜேந்திரன் கடந்த 2 ஆண்டுகளாக மூல நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





