தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே குரும்பலூர் மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 31), பெயிண்டர். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 3 வயதிலும், 4 மாதத்திலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரம்யா தற்போது குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை மகேந்திரன் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story