தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி அருகே சடையால்பட்டியை சேர்ந்த பிரபு மகன் கார்த்திக் (வயது 30). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கார்த்திக் தனக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதாக தனது தாய் சுந்தரியிடம் கூறி வந்தார். இதனால் வீடு மாறி வசிக்கலாம் என அவர் தனது தாயுடன் பழனிசெட்டிபட்டி அரசு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் அந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தாய் சுந்தரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story