தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x

ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள நாச்சிராகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). பெயிண்டர். இவரது மனைவி ரஞ்சினி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சூர்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story