தூக்குப்போட்டு மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 29 Sep 2023 8:15 PM GMT (Updated: 29 Sep 2023 8:15 PM GMT)

தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். வீரமணி கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து ஜெயலட்சுமி மீன் வியாபாரம் செய்து வந்தார். மகள் நந்தினி (வயது 15) திருமங்கலம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.. இந்த நிலையில் மனம் உடைந்த நந்தினி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் விரக்தி அடைந்த தாய் ஜெயலட்சுமியும் தற்கொலைக்கு முயன்றார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


Next Story