தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

ஓச்சேரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ஓச்சேரி அடுத்த நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள பிராமணர் தெருவில் வசித்துவந்தவர் முனுசாமி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் படுக்கை அறையிலிருந்து முனுசாமி வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி சென்று பார்த்தபோது முனுசாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story