தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு நெடும்பாறை காட்டுவிளையை சேர்ந்தவர் குமார்ராஜ் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவருடைய மனைவி ரேகா.குமார்ராஜ் சரியாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்ப செலவுக்கு அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமார்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story