தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 18 Jan 2023 7:00 PM GMT (Updated: 18 Jan 2023 7:01 PM GMT)

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்


திண்டுக்கல் அருகே சிறுமலை அண்ணாநகரை சேர்ந்தவர் பழனிசாமி மகன் மல்லுச்சாமி (வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி திவ்யா (29) என்ற மனைவியும், ஹீரோஷ்மிதா, யுகவர்ஷினி என்ற மகள்களும், தீனா என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மல்லுச்சாமி, அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு பயிர் சாகுபடி பணிக்காக சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மாமரத்தில் அவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


பின்னர் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் மல்லுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.



Next Story