தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 9:57 AM GMT)

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் மணியகாரன் காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அனுபிரியா(27. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. அவர், கடந்த ஒரு மாதமாக சரிவர வேலைக்கு செல்லாமல் அதிகமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சங்கர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story