தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூசி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

தூசி

வெம்பாக்கம் தாலுகா, தூசி அருகே உள்ள மாத்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 37), விவசாய கூலி தொழிலாளி.

இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், நீரிழிவு நோயாலும் நாகப்பன் மனவேதனையில் இருந்தார்.

இதனால் இன்று காலை ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story